"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை, மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை, மாநிலங்களவையில் உடனடிக் கேள்வி நேரத்தின்போது மேலும் அவர் கூறியபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த மர்மம், ஏறத்தாழ 70 ஆண்டுளாக நீடித்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன், நேதாஜி தொடர்பான ஆவணங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பாஜக, ஆட்சிக்கு வந்தபின், அந்த கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறது. நேதாஜிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிய நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே, அவர் தொடர்பான 39 ஆவணங்களை மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று ராய் வலியுறுத்தினார்.