சென்னை ராயபுரத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை சடலம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராயபுரம் வேலாயுத பாண்டித் தெருவில் ஒரு குப்பைத் தொட்டி உள்ளது. இந்த குப்பைத் தொட்டியில் செவ்வாய்க்கிழமை காலை பிளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த குழந்தையின் பெற்றோர், குழந்தை எப்படி இறந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.