மூன்றாவது முறையாகவு இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபட்ச திருப்பதி ஏழுமலையான் வெங்கடசாலபதியை தரிசிப்பதற்காக இன்று மாலை இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தடைந்தார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் திருமலைக்கு சென்றடைந்தார்.
இன்று இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கியுள்ள ராஜபட்ச நாளை (புதன்கிழமை) அதிகாலை 2.45 மணி அளவில் சுப்பரபாத சேவையின் போது வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில் ராஜபட்ச வருகையையொட்டி திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இவருடைய வருகையை எதிர்த்து வைகோ, திருமாளவளன், மற்றும் சில தமிழ் அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜபட்ச வருகையை படம்பிடிக்க சென்ற தமிழக ஊடகங்களை அனுமதிக்க ஆந்திர போலீஸார் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.